Thursday, 11 February 2016

கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படும்

கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படும்
கூட்டு எதிர்க்கட்சியின் கோரிக்கை தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படும்
நாடாளுமன்றில்  சுயாதீனமாக இயங்குவது குறித்த கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகள் தொடர்பில்  கவனம் செலுத்தப்பட்டு உரிய தீர்வு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினரின்  கோரிக்கை குறித்து தனித்து தீர்மானம் எடுக்க முடியாது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்  இது குறித்து கலந்தாலோசித்து, அடுத்த நாடாளுமன்றத் கூட்டத் தொடரின் போது தீர்வு வழங்கப்படும்.

அத்தோடு ,சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விரைவில் கூட்டு எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என பிரதமர் மேலும்  தெரிவித்தார்.
Loading...