|
மக்களை நல்வழிப்படுத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவற்றில் ஒன்று, அவர்கள் காலத்திற்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களைச் சீர்படுத்தியது.
நபிகளார் கூறிய உண்மைச் சம்பவங்கள் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் ஆதாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் மக்களைப் பக்குவப்படுத்துவதற்கும், பண்படுத்துவதற்கும் உதவின. இதனால்தான் அல்லாஹுத் தஆலா திருக்குர்ஆனில் நபிமார்கள் உட்பட பல நல்லவர்களின் நிகழ்வுகளை எடுத்துக் காட்டி அதில் படிப்பினை பெற வேண்டுமெனக் கட்டளையிடுகிறான்.
அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (திருக்குர்ஆன் 12:111) மக்களைப் பண்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக முந்தைய சமுதாயத்தில் நடந்த ஒரு செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்!
|
Saturday, 20 February 2016
![]() |
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய உண்மை நிகழ்வுகள் |
Loading...
