Sunday, 21 June 2015

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு தீர்வை இல்லை




ரமழான் நோன்பை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கு தீர்வைக் கட்டணம் அறவிடுவதில்லையென அரசு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இயங்கும் ஆட்சியில் இன,மத சக வாழ்வை மேம்படுத்தும் ஒரு நடவடிக்கை இதுவென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்களின் உத்தரவின் பேரில் இந்த தீர்வை கட்டணச் சலுகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Loading...