மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
மியான்மார் நாட்டின் (பர்மா) வடமேற்கு பகுதியில் 7.0 ரிச்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரம் இரவு 8.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலப்பரப்புக்கு கீழே 122 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு,இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதேவேளை, மியான்மரில் திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.