Saturday, 19 December 2015

இ.மி.ச ரூ.295 மோசடி: கண்டறிய மூன்று விசாரணைக்குழுக்கள்!













மின்சார சபையின் 295 கோடி ரூபா ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் மூன்று குழுக்கள் விசாரணைகளை மேற் கொண்டுள்ளதாகவும் குற்றம் இடம்பெற்றிருப்பின் விரைவில் அது தொடர்பான விடயங்கள் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற மின்சார சபை ஊழியர்கள் 2344 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு உரையாற்றிய அமைச்சர், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் நிறுவனமாக இலங்கை மின்சார சபை திகழ்கிறது. இத்துறையில் தற்காலிக அடிப்படையில் பணிப்புரியும் 2344 பேர் ஒரே தடவையில் நிரந்தரமாக்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வருடத்திற்கு முதல் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எம்மால் பங்களிப்பு செய்ய முடிந்துள்ளமையை நாம் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றோம்.


Loading...
  • ஒரு பெண் உங்களை பார்த்தால், அந்த பார்வைக்கு என்னென்ன அர்த்த‍ங்கள்? – ஓரலசல்30.05.2015 - Comments Disabled
  • உலகின் மிக உயரமான கட்டிடம் சவூதி அரேபியாவில்13.05.2015 - Comments Disabled
  • UN Secretary General urges 20th amendment to Constitution passed10.06.2015 - Comments Disabled
  • மையோன் முஸ்தபா தனிப் பட்ட முறையில் மிகவும் நல்லவர் அரசியலில் முழு முட்டாள் 04.07.2015 - Comments Disabled
  • மோடி – மைத்திரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சு26.09.2015 - Comments Disabled