Thursday, 24 December 2015

அமைச்சா் றிசாத் பதியுத்தீன் திங்கட் ஹிரு ரீ.வி ஆனந்த தேரருடன் விவாதம்.


அஷ்ரப் ஏ சமத்"

தன்மீது சும்த்தப்பட்ட அவருதுாருகளை நிரூபிக்க பகிரங்க விவதாத்திற்கு வருமாறு அமைசச்சர் றிசாத் பதியுத்தீன்  மாத்தரை ஆனந்த தேரருக்கு விடுத்த பகிரங்கச் சாவாலை தேரா் ஏற்றுக் கொண்டு விவதாத்திற்கு வருவதற்கு அவா் சம்மதித்துள்ளாா். 

இதனையடுத்து தேரா் உடன் விவாதிப்பதற்கு அமைச்சரும்  முன்வந்துள்ளாாா்.


எதிர்வரும்  28ஆம் திகதி திஙகட் கிழமை ஹிரு தொலைக்காட்சியில்  "சலக்குன" என்ற நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு இந்த விவாதம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. 


வில்பத்துக் காட்டை அழித்து முஸ்லீம்களை அமைச்சா் றிசாத் குடி யேற்றுவதகாகும்  வில்பத்து காட்டினை பயன்படுத்தி அவா் போதைப் பொருள் வியாபாரம்" செய்வதாகுவும் கடந்த சனிக்கிழமை விகார  மாகாதேவி புங்காவிற்கு முன்னால்  இடம்பெற்ற ஆர்பாட்டத்தின்போது தேரா் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் மீது இவ்வாறான அபான்டமான பழியை  சுமத்தியிருந்தாா். 

இதனை யடுத்து நேற்று (புதன்கிழமை 23) கொ்ழும்பில் அமைச்சா் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளா் மாநாட்டில்  தன் மீதான குற்றச் சாட்டை முடியுமானால் நிருபீத்துக் காட்டுமாறும் இது தொடா்பில்  நாட்டின் எந்தவொரு தொலைக் காட்சியிலும் தேரருடன் விவாதாம் நாடத்த தான் தயாா் என்றும் அமைச்சா் சாவால் விடுத்திருந்தாா்.  

இதனையடுத்து  இந்த விவாதத்தை நடாத்துவதற்கு 4 தொலைக் காட்சிகள் முன் வந்திருந்தன. எனினும்   ஹிரு தொலைக் காட்சியில்  மாத்திரமே விவாதாத்தை பங்கேற்க தேரா் இணங்கியுள்ளாா்.தேரா் தேர்ந்தெடுத்த ஹிரு தொலைக்காட்சியல் தானும் பங்கேற்க தயாா். என  அமைச்சா் றிசாட்டும்   சம்மதம் தெரிவித்துள்ளாா்.






Loading...