Sunday, 31 May 2015

கண்டனக் கூட்டம்.*சர்வதேச சமூகமே இனப்படுகொலையை, இனச்சுத்திகரிப்பினை தடுத்து நிறுத்து... !

அறிவித்தல்
பர்மாவில் நடந்தேறிவரும் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பினை தடுக்கக் கோரும் அடையாள மக்கள் ஆர்ப்பாட்டமும், கண்டனக் கூட்டமும்...
·         *சர்வதேச சமூகமே இனப்படுகொலையை, இனச்சுத்திகரிப்பினை தடுத்து நிறுத்து... !
 ·         *பிரித்தானிய அரசாங்கமே , மனித உயிர்களை பாதுகாக்க பர்மிய அரசாங்கத்தினை  நிர்ப்பந்தி !
 ·        * ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்களே பர்மாவில் நடக்கும் படுகொலைகளுக்கு பதில்தான் என்ன?
 ·         தேச ,இன, மத அடையாளங்களால் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டிப்போம்!
மேற்படி கோரிக்கைகளை முன்நிறுத்தி, , பிரித்தானிய பிரதம மந்திரியின் காரியாலயத்திற்கு முன்னால், எதிர்வரும் 06ம் திகதி (ஜுன் 2015) சனிக்கிழமை காலை 12 .00 மணிக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புகளினதும் மக்களினதும் கவனத்தினை  ஈர்ப்பதற்காகவும், அரசியல் அழுத்தத்தினை ஏற்படுத்துவதற்குமாக இந்த அடையாள நிகழ்வினை நடாத்த முன் வருகிறோம்.பிரித்தானியாவிலுள்ள அனைத்து  சமூக நிறுவனங்களும், பொதுமக்களும்  ஆதரவு வழங்க முன்வந்தால்தான் இதனை காத்திரமாக நடாத்த முடியும் . இந்த அடையாள எதிர்ப்பு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் ஆதரவு தருமாறும் வேண்டுகிறோம்.

Overseas Srilankan Muslim Organisation (OSMO)
Loading...