Friday, 31 July 2015

இலங்கை: துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி

கிர்க
துப்பாக்கி சூடு நடந்த பகுதி
துப்பாக்கி சூடு நடந்த பகுதி
இலங்கையின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். 12 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
தலைநகர் கொழும்பில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தவர்கள் மீது வாகனத்தில் வந்த துப்பாக்கிதாரிகள் சுட்டனர்.
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் நடக்கும் முதலாவது மிகப்பெரிய வன்முறைச் சம்பவம் இதுவே.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க போட்டியிடுகிறார்.
துப்பாக்கி ரவை
துப்பாக்கி ரவை
மறுபுறத்தில் அவருக்கு எதிராக களத்தில் நிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியைப் பிடிக்க களமிறங்கியிருக்கிறார். ஆனாலும் அவரது கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன மஹிந்தவை பிரதமர் பதவிக்கு ஆதரிக்காதது மட்டுமல்ல, அவரை அரசியலைவிட்டு விலகும்படியும் கோரியிருக்கிறார்.
Loading...
  • நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும் ஐ.நாவில்…! அதிர்ச்சியில் அதிகாரிகள்.25.06.2015 - Comments Disabled
  • இலங்கை வளர்கிறது ,இலங்கை வளர்கிறதா ?03.06.2015 - Comments Disabled
  • அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் !!01.12.2015 - Comments Disabled
  • இலங்கையிலும் நினைவுகூரப்படும் அப்துல் கலாம்29.07.2015 - Comments Disabled
  • முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் வட மாகாணசபை பங்கெடுக்க வேண்டும்'02.11.2015 - Comments Disabled